Sunday 11 February 2018


NFTCL - மாநில செயற்குழு முடிவுகள்

10/02/2018 அன்று கீரனூரில் 
NFTCL மாநில செயற்குழு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
பொதுச்செயலர் தோழர்.C.K.மதிவாணன் அவர்களின் 
உணர்ச்சியுரை தோழர்களை உற்சாகப்படுத்தியது. 
AITUC போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனப் பொதுச்செயலர் தோழர்.லட்சுமணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 
AIBSNLE மாநில உதவிச்செயலர் தோழர்.காமராஜ் அவர்கள் 
எழுச்சிமிகு அரசியல் உரையாற்றினார்.
சிறப்பான ஏற்பாடுகளைக் கீரனூர் தோழர்கள்...
தோழர்.மில்டன் தலைமையில் செய்திருந்தனர்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கோரிக்கை மனு – 20/02/2018
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன. அவற்றை முழுமையாகத் தொகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம்
 கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 
அதன் நகல் அந்தந்த பகுதி 
தொழிலாளர் நல ஆணையர்களுக்கும்...(ALC/RLC)
சென்னை DY.CLC துணைத் தொழிலாளர்
 ஆணையருக்கும்  அனுப்பப்பட வேண்டும்.

பெருந்திரள் போராட்டம் – 02/03/2018…
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக
சம்பளம்  பட்டுவாடா செய்யப்படாத கொடுமையைக் கண்டித்தும்…
ஒவ்வொரு மாதமும் 7ம்தேதி சம்பளம் வழங்கக்கோரியும்…
ஆட்குறைப்பு என்ற தமிழ் மாநில நிர்வாகத்தின் கவைக்குதவாத
புதிய பூச்சாண்டித்தனத்தைக் கடுமையாக கண்டித்தும்….

சென்னையில் உள்ள தமிழ்மாநில...
 முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த ஊழியர்கள் திரண்டு
பெருந்திரள் போராட்டம் நடத்துவது.

தோழர்களே… அணி திரள்வோம்…. அநீதி களைவோம்….

No comments:

Post a Comment