Wednesday 14 February 2018


கூட்டு நிறுவனம் - JOINT VENTURE

09/02/2018 அன்று திரு.மோதிலால் வோரா MP அவர்கள்
BSNL துணை நிறுவனம் அமைப்பது பற்றி…
நாடாளுமன்ற மேலவையில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு
நமது இலாக்கா அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

 அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகிறது.

தற்போது BSNLலில் 66847 செல்கோபுரங்கள் உள்ளன. 
அவற்றில் 61124 கோபுரங்கள் BSNLன் சொந்த நிதியிலும்…
5723 கோபுரங்கள் USO நிதியிலிருந்தும் நிறுவப்பட்டன.

மேற்கண்ட செல்கோபுரங்களைத் தனியாகப்  பிரித்து 
துணைநிறுவனம் ஆரம்பித்திட அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் புதிதாக உருவாக்கப்படும் துணை நிறுவனம் 
இரண்டு ஆண்டுகளில் தனது சொத்துக்களையும்…நிதிநிலையையும் மேம்படுத்திய பின்பு…தக்கதொரு பங்குதாரருடன் இணைந்து… 
JOINT VENTURE COMPANY - கூட்டு நிறுவனத்தை உருவாக்கும்…

புதிய செல்கோபுர நிறுவனம் தனியாரிடம் விடப்படுமா?
அவ்வாறு விடப்பட்டால் அதற்கு காரணம் என்ன?
என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதில் இல்லை….

No comments:

Post a Comment