Wednesday 14 February 2018


வறுமையை விரட்டுவோம்….
வறுமையை விரட்டுவோம்….
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்…
அரசியல்வாதிகளின் அரிச்சுவடி முழக்கம் இது…
ஆட்சிகள் மாறுகின்றன…
காட்சிகள் மட்டும் மாறுவதில்லை…

ஆண்டுதோறும் வறுமை வளர்கிறது…
வேலையில்லாதோர் எண்ணிக்கை…
வேகமாய் உயர்கிறது….
இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை
உலகில் எங்கும் இல்லாத அளவு 
மிகவேகமாய் உயருவதாக
ILO - INTERNATIONAL LABOUR ORGANISATION
சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலையோடு
சமீபத்திய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது 2 கோடி படித்த இளைஞர்கள்
வேலையில்லாமல் திண்டாடுவதாகவும்…
2019ல் இது மிக உயருமென்றும்….
உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு
வேலையில்லாத் திண்டாட்டம்…
இந்திய தேசத்தில் தலைவிரித்தாடும் எனவும்
ILO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது….

பாரத தேசத்தில்...
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்..
படித்த இளைஞர்கள் இரண்டு கோடி பேருக்கு..
ஆண்டு தோறும் வேலை தருவோம்….
பாரதப்பிரதமரின் தேர்தல் கால உறுதிமொழி இது…

இதோ…. உறுதிமொழி நிறைவேறுகிறது…
படித்த இளைஞர்களை…
பாரதநாட்டு மன்னர்களை…
பக்கோடா அழைக்கிறது….
வாருங்கள்…
வறுமையை விரட்டுவோம்….

No comments:

Post a Comment