Monday 26 February 2018

நில்கவனிAIRCELL…

தமிழகம் மற்றும் சென்னையில் 
அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட… 
அதிக COVERAGE கொண்ட AIRCELL நிறுவனம் 
இன்று தொலைத்தொடர்பில் OUT OF COVERAGE ஆகிவிட்டது

மிக முக்கிய காரணம் Jioவின் போட்டியால் வந்த வினையாகும்
TOWER உரிமையாளர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாத காரணத்தால்
6500 செல்கோபுரங்கள் செயலிழப்பு.  

2015 மற்றும் 2016ல் செயல்பாட்டு லாபம் ஈட்டி வந்த AIRCELL நிறுவனம்
தற்போது டிசம்பர் 2017ல் 120 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது

இன்றைய தேதியில் 15500 கோடி வங்கிக்கடன்
நிறுவனம் மஞ்சள் கடிதம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
புதிய INSOLVENCY PROFESSIONAL இயக்குநர் குழு அமைக்கப்பட்டுள்ளது

சொத்துக்களை விற்றுத்தான் கடனை அடைக்கும் நிலை உள்ளது
நாடு முழுவதும் சேவை செய்தாலும் 
தமிழகம் மற்றும் சென்னைதான் AIRCELL நிறுவனத்தின் பலமாகும்

மொத்தமாகவே தனது சேவையை நிறுத்துமா? அல்லது 
சேவையை சுருக்கி தமிழகத்தில் மட்டுமே தொடருமா
என்ற கேள்வியும் எழுந்துள்ளது

ஏறத்தாழ 5000 ஊழியர்கள் பணிசெய்கின்றனர்
அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது

அரசு முத்திரை பெற்ற அம்பானிகளால் 
கண்மூடித்தனமான போட்டி என்ற பெயரில் 
நமது நாட்டில் தொலைத்தொடர்பு சேவை சீரழிக்கப்பட்டு  வருகிறது.

களத்தில் உள்ள போட்டியாளர்களைக் காலி செய்து விட்டு 
ஏகபோக வெற்றியை அனுபவிக்க JIO துடிக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய 
ஒழுங்கு படுத்த வேண்டிய 
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் 
TRAI வாயில் விரலோடு வேடிக்கை பார்க்கிறது.

இன்றைக்கு... AIRCELL…
நாளைக்கு... AIRTEL… BSNL…
என்ன செய்யப்போகிறது அரசு?

No comments:

Post a Comment