Tuesday 9 January 2018

யார் குற்றவாளி...
ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை


கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில் 
23 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த  மனோஜ் என்பவர் மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத காரணத்தால்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

அருமனை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில்  கேபிள் ஜாயிண்டராக பணியாற்றி வந்தார்
ஒப்பந்த தொழிலாளரான இவருக்கு கடந்து மூன்று மாதங்களாக 
ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மனோஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

BSNL ஒப்பந்த தொழிலாளி கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறவில்லை எனக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்த கொடுமையான சம்பவம் தொடர்பாக அருமனை காவல்நிலைய போலீசார் 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்…
வெறும் சோற்றுக்கு வந்ததிங்கே பஞ்சம்…

No comments:

Post a Comment