Sunday 28 January 2018

கலைக்கப்பட்ட...கனவு
28/01/2018 அன்று JE (TTA) பதவிகளுக்கான
இலாக்காப் போட்டித்தேர்வு நடந்தேறியுள்ளது.

நடத்தப்பட்ட தேர்வு போன்மெக்கானிக் தோழர்களுக்கு...
கேட்கப்பட்ட கேள்விகளோ பொறியியல் பட்டதாரிகளுக்கானது.
ஒருவேளை TTA என்பது JUNIOR ENGINEER எனப்பெயர்மாறியதால்..
ENGINEER LEVELலில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கலாம்…

தேர்வு எழுதிய யாரும் தேறும் நிலைமை இல்லை என
தேர்வு எழுதிய தோழர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ON LINE தேர்வு, தவறான மதிப்பெண்களுக்கு
எதிர்மறை மதிப்பெண் என்ற ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு அப்பால்..
யாருமே பதிலளிக்க இயலாத கேள்விகளைக் கேட்டு
நமது தோழர்களின் பதவி உயர்வு ஆசை பறிக்கப்பட்டுள்ளது.

ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பார்கள்.
ஏட்டறிவு குறைந்தவர்கள்தான் நமது தோழர்கள்.
ஆனால் எட்டும் அறிவில் அனுபவ அறிவில் இளைத்தவர்களல்ல.
அத்தகைய ஒரு பார்வையில்தான்…
அருமைத்தோழர்.குப்தா அவர்கள்…
இலாக்கா ஊழியர்களுக்கான தேர்வுகளை வடிவமைக்கச் செய்தார்.

இப்போது அதெல்லாம் கனாக்காலமாகிப் போய்விட்டது….
ஊழியர்களின் பதவி உயர்வு ஆசையும் கனவாகிப் போய்விட்டது…

நிர்வாகம் இது பற்றி பரிசீலிக்குமா?
தொழிற்சங்கங்கள் இது பற்றி யோசிக்குமா?
தேர்வெழுதிய தோழனின் ஆசையும் ஏக்கமும் இதுவே…

No comments:

Post a Comment