Monday 29 January 2018

ஐந்து நாள் அறவழிப் போராட்டம்

காரைக்குடி அனைத்து சங்க கூட்ட முடிவுகள்

காரைக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில்…
ஜனவரி 30 செவ்வாய்க்கிழமை முதல்
பிப்ரவரி 03 சனிக்கிழமை வரை…
ஐந்து நாட்களும் தொடர்ந்து….
சத்தியாக்கிரக அறவழிப்போராட்டம் நடைபெறும்.

போராட்டக்களங்கள்
  • காரைக்குடிப் பொதுமேலாளர் அலுவலகம்
  • சிவகங்கைத் தொலைபேசி நிலையம்
  • பரமக்குடித்  தொலைபேசி நிலையம்
  • இராமநாதபுரம் தொலைபேசி நிலையம்…

அனைத்து இடங்களிலும்...
அண்ணல் காந்தியின் திருவுருவப்படத்திற்கு…
காலை 11 மணிக்கு…
மலரஞ்சலி செலுத்திய பின்…
சத்தியாக்கிரக அறப்போராட்டம் துவங்கும்…

வாடிக்கையாளர் சேவை மையங்களில்…
வசூல் செய்யும் பணி மட்டுமே நடைபெறவேண்டும்…
வந்தே மாதரம் முழங்கி மற்றெல்லோரும்…
நாள் முழுக்க  உரிமை முழக்கம் செய்திட வேண்டும்….

அனைத்து சங்கத்தலைவர்களும்…
கீழ்க்கண்ட தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து
அறப்போராட்டக் கருத்துரை வழங்குவர்….
30/01/2018 – காரைக்குடி
31/01/2018 – சிவகங்கை
01/02/2018 – பரமக்குடி
02/02/2018 – இராமநாதபுரம்
03/02/2018 – காரைக்குடி

தோழர்களே…
ஒப்பந்த ஊழியர்கள்…
ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
அதிகாரிகள்… ஊழியர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து…
அறவழி செல்வோம்…
அநீதியை வெல்வோம்…

No comments:

Post a Comment