Sunday 31 December 2017

பிறந்தது புத்தாண்டு ….
பிறக்குமா?... புத்துணர்வு?…

2018…
புத்தாண்டு பிறந்து விட்டது….

இரவிலே வாங்கியதாம் சுதந்திரம்… எனவே…
இந்திய தேச மக்கள்..
இரவெல்லாம் தூங்காமல்…
இனிமையாய்க் கொண்டாடி விட்டனர்…

பிறந்து விட்டது….2018
ஆனால்…
பிறக்கவில்லை…. 
மனதில்… இன்னும் உற்சாகம்... 

தலைவிரித்தாடும் மதவெறி… 
இனவெறி…சாதிவெறி….

அதிகாரத்திற்கு  ஆசைப்படும் 
அரிதார  அசிங்கங்கள்…

இலஞ்சமும்... ஊழலும்...
பஞ்சமில்லாமல் பரவிடும் கொடுமை…

கூலித்தொழிலாளிகள் 
கூலிக்கு அல்லாடும் துயரம்...

வயிற்றுக்குச் சோறிடும் 
விவசாயி கயிற்றில் தொங்கும் கேவலம்…

நிரந்தரத் தொழிலாளர்கள் 
ஊதிய உயர்வுக்குப் போராடும் அவலம்…

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 
ஓய்வூதிய உயர்வுக்கு ஏங்கிடும் நிலைமை…

இரவிலே வாங்கினோம் சுதந்திரம்…
இருளிலே இருக்கிறது இன்பம்...

இனிப்பை வழங்கு… 
இருட்டிலே  கொண்டாடு…
நாடு எப்படிப் போனால் நமக்கென்ன?

No comments:

Post a Comment