Saturday 23 December 2017

முத்து நகரில் ஓர் முத்தான விழா…

23/12/2017 அன்று தூத்துக்குடி வங்கி ஊழியர் சங்க அலுவலகத்தில் தூத்துக்குடி NFTCL ஒப்பந்த ஊழியர் மாவட்ட சங்க துவக்க விழா மிகச்சிறப்புடன் நடைபெற்றது. NFTE மாவட்டச்செயலர் தோழர்.பாலகண்ணன் தலைமையேற்றார். NFTCL மாநில செயல்தலைவர் தோழர்.மாரி மாநாட்டைத் துவக்கி வைத்தார். NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் ஒப்பந்த ஊழியரது இன்றைய அவலங்களை எடுத்துரைத்து அவற்றைத் தீர்ப்பதற்கு NFTCL எடுத்துக்கொண்டிருக்கும் பெரு முயற்சிகளைப் பற்றியும் விவரித்தார்.
NFTCL அகில இந்திய சங்க நிர்வாகிகள் தோழர்கள். அசோக்ராஜன்,சுப்பராயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
நெல்லை மாவட்டத்தின் சார்பாக தோழர்கள் கணேசன், கணபதிராமன்,பாபநாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தோழர்.பரமசிவம் அவர்களும், வங்கி ஊழியர்கள் சார்பாக தோழர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். ஒப்பந்த ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் படும் பாடுகளையும்… சம்பளம் கிடைக்காத வேதனை நிலையையும் தோழர்கள் எடுத்துரைத்தனர். தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்துக் குரல் எழுப்பப்பட்டது. 26/12/2017 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக 
நடத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

மாவட்டத்தலைவர் : தோழர்.இராஜன் CLR
மாவட்டச்செயலர் : தோழர்.பன்னீர்செல்வம் TT
மாவட்டப்பொருளர் : தோழர்.ஆரோக்கியராஜ் CLR

இந்திய தேச வரலாற்றில்…
தொழிற்சங்கம் தோன்று முன்னே…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி…
1908ல் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை ஒன்று திரட்டி
மாபெரும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி
தொழிலாளர்களின் உரிமை வென்ற தூத்துக்குடி மண்ணிலே… 
NFTCL ஒப்பந்த ஊழியர் சங்கம் 
வெற்றி நடை போட வாழ்த்துகின்றோம்…

No comments:

Post a Comment