Monday 13 November 2017

13/11/1938…
பிறந்தார்… இராமசாமி… பெரியாராக…

பெண்களுக்காக குரல் கொடுத்த…
ஈ.வெ.ராமசாமிக்கு….
பெண்களே கொடுத்தனர்…
ஈடு இணையற்ற பட்டம்….
பெரியார்… பெரியார்… பெரியார்… என்று…

பெண்களுக்கு கல்வி…
பெண்களுக்கு சொத்து…
பெண்களுக்கு உரிமை…
பெண்களுக்கு சமத்துவம்… 

சட்டங்கள் ஆள வேண்டும்…
பெண்கள் ஆணுக்கு இணையாக
பட்டங்கள் பெற வேண்டும்… என
பெரியார் குரல் கொடுத்தார்…

பெண்களோ பெரியார் என்னும்
பெரும் பட்டத்தையே…
பெரியாருக்கு கொடுத்தனர்…

1938 நவம்பர் 13ம் நாள்…
சென்னை பெத்தநாயக்கன் பேட்டை…
பெண்களின் உரிமை மாநாடு…
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்…
திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை அம்மையார்…
மருத்துவர் தர்மாம்பாள்..
மீனாம்பாள் சிவராஜ்…
பண்டித நாராயணி அம்மையார்…
தோழியர் பார்வதி அம்மையார்…
அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார்…
என விடுதலை தாகம் கொண்ட…
வீரத்திருக்கூட்டம் கூடி…

தங்கள் விடுதலைக்கு குரல்கொடுத்த…
பகுத்தறிவுப் பகலவனுக்கு…
தந்தைப் பெரியார் என
பட்டம் தந்த நாள் இன்று…

பெண்கள் விடுதலைப் போரில்…
பெரும்பங்கு கொண்ட…
பெருமை மிக்கத் தலைவனுக்கு...
பெரியார் பட்டம் பொருத்தமன்றோ…

No comments:

Post a Comment