Sunday 22 October 2017

மதுரை மாவட்டப்போராட்டம்

அன்று...
வளையாத செங்கோலுக்குப் 
பெயர்பெற்றது பழம்பெரும் மதுரை…

இன்றோ...
BSNLன் மதுரை...
தனது  உத்திரவுகளை… 
நிர்வாக நடைமுறைகளை…
தனது  வசதிக்கு… 
தனக்கு வேண்டியவர்  சதிக்கு...
வளைப்பதற்குப் பெயர் பெற்றுள்ளது…

வலுத்தவன் கண்ணில் வெண்ணெய்…
இளைத்தவன் கண்ணில் சுண்ணாம்பு…
இதுதான்...
இன்றைய மீனாட்சியின் தேனாட்சி...
இதுதான்...
இன்றைய மதுரை மாவட்ட நிர்வாகம்… 

எனவே மதுரை மாவட்டத்தின்…
ஒருதலைப்பட்ச...  
நிர்வாக நடைமுறையை எதிர்த்து…
பாரபட்ச அணுகுமுறையைக் கண்டித்து…

மதுரைப் பொதுமேலாளர் 
அலுவலகம் முன்பாக 
24/10/2017 - செவ்வாய்  காலை 10 மணி  முதல் 

காலவரையற்ற
உண்ணாவிரதப்போராட்டம்

தென்பகுதி மாவட்டச்செயலர்கள்...
மாநிலச்சங்க நிர்வாகிகள்...
மற்றும் முன்னணித் தோழர்கள்...
பங்கேற்பு...

மதுரை செல்வோம்...
சாயும் தராசு முள்ளை...
சரி செய்வோம்...

மதுரை செல்வோம்...
சார்பற்ற அணுகுமுறையை
 உறுதி செய்வோம்...

மதுரை செல்வோம்...
நீதியை...  நியாயத்தை...
நிலை நிறுத்துவோம்...

உணர்வோடு... உறுதியோடு...
வாரீர்…. தோழர்களே…

1 comment:

  1. நீதியையும்,நியாயத்தையும், நிலைநாட்டிட வருகை தரும் தோழர்களை வருக வருக என மதுரை மாவட்ட NFTE-BSNL சார்பில் வரவேற்க்கிறோம்.....

    ReplyDelete