Monday 16 October 2017

கந்தக மலர்கள்

காகிதங்களில் கல்வியை அறிந்ததில்லை…
காகிதங்களில் கந்தகமே அறிந்தோம்…

கந்தகம் எரிந்தால்தான்…
காந்துகின்ற எங்கள் வயிறு அணையும்…

புத்தகங்களை நாங்கள் புரட்டியதில்லை….
கந்தகங்களே எங்கள் வாழ்வைப் புரட்டிப்போடும்…

நாடாள்வோர்... 
நமத்துப்போன பட்டாசாகிப் போனபின்…
நாங்கள் யாரிடம் சொல்வோம்… செல்வோம்…

No comments:

Post a Comment