Monday 4 September 2017

ஆழ்ந்த இரங்கல்

தர்மபுரி மாவட்டத்தில் TRANSMISSION பிரிவில் பணிபுரிந்த தோழர்கள் 02/09/2017 அன்று பணிக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியது என்ற கொடும் செய்தி கேள்வியுற்று மிக்க துயரம் கொள்கின்றோம். இரண்டு தோழர்கள் உயிர் நீத்துள்ளனர். நான்கு தோழர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  உயிர் நீத்த தோழர்.ஜீவா புதிதாக BSNLலில் 
JE பணிநியமனம் பெற்றவர். மற்றொரு தோழர்.கஜேந்திரன் 
நீண்ட நாட்களாக ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிபவர். 

இரண்டு தோழர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் இல்லை என்பது மிக்க கொடுமை. இருவருக்குமே 
EPF திட்டத்தில் உள்ள மிகச்சொற்பக் குடும்ப ஓய்வூதியமே கிடைக்கும்.  BSNL நியமன ஊழியர்களுக்கு இன்னும் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அகால மரணம் அடையக்கூடிய ஊழியர்களுக்கு புதிய நலத்திட்டம் அமுல்படுத்தப்படுவதும் பரிசீலனையில்தான் உள்ளது. பணியில் இருக்கும் போது உயிர் நீக்கும் ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் கொடுமையானது. BSNLக்காக உழைத்து உயிர் நீத்த தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது ஒவ்வொரு ஊழியரின் கடமையாகும். மாநிலம் தழுவிய அளவில் இதற்காக ஒரு நிதி திரட்டப்பட்டு அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டும்.

உயிர் நீத்த தோழர்களின் மறைவிற்கு 
 நமது மனங்கசிந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம். 

No comments:

Post a Comment