Monday 25 September 2017

முத்துக்குளித்த முத்து நகர் மாநாடு 
முன்னாள் MP தோழர்.அப்பாத்துரை அவர்களுக்கு மூத்த தோழர்.பாலு அவர்கள் பொன்னாடை போர்த்தும் காட்சி. மேடையில் மாநிலச்செயலர் தோழர்.நடராஜன், அருணாச்சலம், சுபேதார் அலிகான், நெல்லை கணேசன், பாலக்கண்ணன் மற்றும் பலர்.
NFTE தூத்துக்குடி மாவட்ட மாநாடு 
25/09/2017 அன்று தொழிற்சங்கத்தின் தோற்றுவாய் நகரான 
தூத்துக்குடியில் சிறப்போடும் நிறைவோடும் நடைபெற்றது. 
பல்வேறு தொழிற்சங்கத்தலைவர்களும், 
அரசியல் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

அணி என்னும் பிணி விலக்கி
ஒருமனதாக... நிறைமனதாக... கீழ்க்கண்ட தோழர்கள் 
நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத்தலைவர்
தோழர்.தங்கவேலு

மாவட்டச்செயலர்
தோழர்.பாலக்கண்ணன்

மாவட்டப்பொருளர்
தோழர்.ஜான்சன் சாமுவேல்

தோழர்.பாலுவின் வழிகாட்டுதலில்...
தோழர். பாலக்கண்ணனின் தொழிற்சங்கப்பயணம் 
புதிய பாதையில்… புதிய வேகத்தில்…
இணைந்தே தொடர… இனிதே தொடர….
நமது நல்வாழ்த்துக்கள்….

வேற்றுமை என்னும் மூச்சடக்கி…
ஒற்றுமை என்னும் முத்துக்குளித்த...
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வாழ்த்துக்கள் பல…

No comments:

Post a Comment