Wednesday 27 September 2017

ஒப்பந்த ஊழியர் ஊதியம்


BSNL நிதி நெருக்கடி காரணமாக
தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களது சம்பளப்பட்டுவாடா தாமதமானது. நேற்று நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு ஒப்பந்தகாரர்களின் பழைய பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. 
எனவே இன்று ஒப்பந்த ஊழியர்களது சென்ற மாதச்சம்பளம் பட்டுவாடா ஆகும். சம்பளப்பிரச்சினைக்கு பரிவோடு தீர்வு கண்ட தமிழ் மாநில நிர்வாகத்திற்கும்... காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்… நமது நன்றிகள் உரித்தாகுக. 

வருங்காலங்களில் உரிய காலத்தில் சம்பளப்பட்டுவாடா செய்வதற்கு DGM(Finance) சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். அதனடிப்படையில் வருங்காலங்களில் தாமதங்கள் தொடராமல் செயலாற்றுவோம்.

இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்குவதற்கு ஒப்பந்தகாரர்களுக்கு உடனடியாக கடிதம் எழுதிடவும், திறன் அடிப்படையில் ஊழியர்களைத் தரம் பிரிப்பதற்கு குழு அமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரம் துவங்கப்படும் எனவும் DGM(ADMN) உறுதியளித்துள்ளார். 
அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment