Thursday 21 September 2017

குத்தகையை ரத்து செய்… 


இன்று தேதி….22
இன்றுவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு..
காரைக்குடி மாவட்டத்தில் கூலி கொடுக்கப்படவில்லை…
ஜூன் மாதம் வரை பல ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டிருந்தும் கூட அவர்கள் கூலியைத் தர மறுக்கின்றனர்.

எல்லா பில்களும்  பட்டுவாடா ஆனால்தான்
கூலியைக் கொடுப்பது என்ற இறுமாப்பு நிலைக்கு
ஒப்பந்தகாரர்கள் சென்று விட்டனர்.

தொலைபேசியில் அழைத்தால் அவர்கள் சட்டை செய்வதில்லை…
ஒப்பந்தகாரர்களது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்…
இதோ.. எங்கள் உரிமையாளரைப் பேசச்சொல்கின்றோம்..
என்று சொல்லி விட்டு நம்மை அலைபேசியில்
அநாதையாக விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
நிர்வாக அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் இதே நிலைதான்…

எனவே…
காரைக்குடி மாவட்டத்தில்…
தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்படும்
ஒப்பந்தகாரர்களின் குத்தகையை ரத்து செய்யவும்….
அவர்களைக் கறுப்புப் பட்டியலில் 
BLACK LISTல் சேர்க்க கோரியும்…

இன்று 22/09/2017 மதியம் 01.00 மணியளவில்
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 
நடைபெறும்…
ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும்
தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment