Tuesday 8 August 2017

அமைச்சருடன் சந்திப்பு 
அமைச்சருடன் NFBUA கூட்டமைப்புத் தலைவர்கள் 
BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 
08/08/2017 அன்று டெல்லியில் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேசியகூட்டமைப்பு சார்பாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது. NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார். NFTE தலைமையிலான 
NFBUA கூட்டமைப்பிற்கு நமது வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment