Tuesday 8 August 2017

வெள்ளையனே...வெளியேறு
75வது ஆண்டு நினைவு
QUIT INDIA MOVEMENT  - 09/08/1942

08/08/1942ல் பம்பாய் மாநாட்டில்…
மகாத்மா உணர்ச்சி பொங்க முழங்கினார்.

இதோ… ஒரு சுருக்கமான மந்திரத்தை
நான் உங்களுக்கு வழங்குகிறேன்.
அதை
உங்கள் இதயங்களில் பதிந்து கொள்ளுங்கள்…
உங்கள் மூச்சில் சுவாசியுங்கள்…
உங்கள் பேச்சில் உச்சரியுங்கள்..
அந்த தாரக மந்திரம் இதுதான்…
செய் அல்லது செத்து மடி…
DO...OR...DIE 
ஒன்று நாம் இந்தியாவை விடுவிப்போம்…
அல்லது அந்த வேள்வியில் செத்து வீழ்வோம்…
அடிமைத்தனம் நீடித்து நிலைப்பதைக் காண
நாம் உயிர் வாழ வேண்டிய அவசியமில்லை…
நம் சுக துக்கங்களைத் தூக்கி எறிவோம்…
விடுதலை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்…
அதை அடையும் முயற்சியில்..
உயிரை அர்ப்பணிக்கத் தயங்க மாட்டோம்..
உயிரை அர்ப்பணிப்பவன் அமரனாவான்…
உயிரைக் காத்து நிற்பவன் கோழையாவான்…
கோழைகளால் ஒரு தேசம் விடுதலை அடையாது…
சுதந்திரம் கோழைகளுக்கானது அல்ல…
இதோ இறுதியாகச் சொல்கிறேன்…
இந்தியத் தாயின் புதல்வர்களே…
நாட்டு விடுதலைக்காக …
செய் அல்லது செத்து மடி….

இன்றுடன்….
75 ஆண்டுகள் ஆகி விட்டன….
10000 பேர் உயிரிழப்பு…
100000 மக்கள் சிறை நிரப்பு…
ஆண்டுக்கணக்கில் தலைவர்கள் சிறைவாசம்…
சொல்லொணாக் கொடுமைகள்…
தாங்கவியலா துன்பங்கள்…
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு…
வெள்ளையனே வெளியேறு… என
நாடு கொதித்தது… கொந்தளித்தது…
இறுதியில்….
வெள்ளையனை வெளியேற்றியது….
வெள்ளையன் வெளியேறினான்…

இன்றோ…
வெள்ளைத்தனம் ஆட்சி செய்கிறது…
கள்ளத்தனம் ஆட்சி செய்கிறது…
மதவாதம் ஆட்சி செய்கிறது…
இனவாதம் ஆட்சி செய்கிறது…
எங்கள் தேசத்தந்தையே…
மீண்டும் பிறந்து வா…
வெள்ளையர்களை வெளியேற்ற….

No comments:

Post a Comment