Thursday 17 August 2017

வீரத்திருமகன்
ஆகஸ்ட்... 18
அருமைத்தலைவர் நேதாஜி
மறைக்கப்பட்ட நாள்
சுபாஷ் சந்திர போஸ்….
நீங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்…
நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகின்றேன்…
என்று முழங்கிய வீரத்திருமகன்…

ஆயுதம் ஏந்தாமல் விடுதலையை
அடைய முடியாது என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்…

எல்லாம் கிடைக்க வேண்டும்…
அல்லது ஒன்றுமே தேவையில்லை என முழங்கியவர்….
மகாகவி தாகூரால்...
நேதாஜி எனப் பட்டம் சூட்டப்பட்டவர்…

1938ம் ஆண்டு… நேதாஜி...
இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார்..
1939ல் இரண்டாம் முறையும் போட்டியிட்டார்…
நேதாஜியை விரும்பாத காந்திஜி...
அவருக்கு எதிராகப் போட்டியிட...
நேருவையும்... இராஜேந்திரபிரசாத்தையும்...வற்புறுத்தினார்...
ஆனால் அவர்கள் இருவரும்....
அவருக்கு எதிராகப் போட்டியிட மறுத்தனர்….
எனவே காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவை
நேதாஜிக்கு எதிராக நிறுத்தினார்….
பட்டாபி சீத்தாராமையா தோல்வியுற்றார்….
பட்டாபியின் தோல்வியை தனது பெரும் இழப்பாக
கருதிய காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்….
இந்த நாடகங்களைக் கண்டு மனம் வெறுத்த
நேதாஜி காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறினார்…

1940ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்…
1941ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தார்…
ஆப்கானிஸ்தான் சென்றார்…..
அங்கிருந்து ரஷ்யா சென்றார்…
அங்கிருந்து ஜெர்மன் சென்றார்…
ஹிட்லரை சந்தித்தார்…
1941ல் சுதந்திர இந்திய மையம் தொடங்கினார்…
சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் தொடங்கினார்..
1943ல் சிங்கப்பூரில்….
இந்திய தேசிய சுதந்திரக் கொடியை ஏற்றினார்…
சுதந்திர இந்தியா என்று பிரகடனம் செய்தார்…

1944ல் இந்திய தேசிய இராணுவப்படைக்கு தலைமையேற்று
ஆங்கிலேயரைப் போர்க்களத்தில் சந்தித்தார்…
தோல்வி அடைந்த போதும் சோர்ந்து விடாமல் செயல்பட்டார்.
இந்தியாவை அடக்கி வைக்கும் ஆற்றல் எவருக்குமே இல்லை…
நமது தேசம் விடுதலை அடைந்தே தீரும்  என
1945 ஆகஸ்ட் 15 வானொலியில் வீர முழக்கம் செய்தார்….

அவரது தீர்க்க தரிசனம் மிகச்சரியாக நடந்தேறியது..
1947 ஆகஸ்ட் 15 நமது தேசம் விடுதலை அடைந்தது..
1945 ஆகஸ்ட் 18 விமானத்தில் பயணித்த போது…
பர்மோசா தீவுக்கருகே அவரது விமானம் விபத்துக்குள்ளாகி
நேதாஜி இறந்தார் என ஜப்பான் அரசு அறிவித்தது…
இன்று வரை அவரது மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது…
அவரது தியாகம் அளப்பரியது…. ஒப்பிட முடியாதது…
இரத்தம் சிந்தி இந்திய தேச விடுதலைக்குப் பாடுபட்ட
வீரத்திருமகன் நேதாஜியை என்றும் நினைவு கூர்வோம்…
வாழ்க. அவரது புகழ்…. வளர்க அவரது புகழ்…

No comments:

Post a Comment