Monday 17 July 2017

விதி 8 மாற்றல்கள்


காரைக்குடி மாவட்டத்திலிருந்து இரண்டு எழுத்தர்கள் 
தோழர்.முகமது காசிம் மதுரைக்கும்...
தோழர்.லெட்சுமணன் தூத்துக்குடிக்கும்...
விதி 8ன் கீழ் மாற்றல் இடப்பட்டுள்ளனர்.


காரைக்குடி மாவட்டத்தில் கடும் ஊழியர் பற்றாக்குறை இருந்தபோதிலும்… மனிதாபிமானத்தோடு தோழர்களுக்கு மாற்றல் இட்ட காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், உதவிட்ட அனைத்து  அதிகாரிகளுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். 

ஏறத்தாழ 10 ஆண்டுகள் காரைக்குடியில் பணி புரிந்திருந்த போதிலும் மாற்றலுக்கு வழியின்றி தோழர்கள் தவித்து வந்த நிலையில் 
விதி 8 மாற்றல் பிரச்சினையை காரைக்குடி பொதுமேலாளரிடமும், 
மாநிலக்கூட்டு ஆலோசனைக்குழுவிலும் விவாதித்து உரிய தீர்வு கண்ட மாநிலச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்களும் நன்றிகளும்…

No comments:

Post a Comment