Monday 19 June 2017

ஊதியக்குழு DPE கடிதம்

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைத்திட 
உரிய வழிகாட்டுதலை வெளியிடுவதற்கு DPE இலாக்காவைப் பணித்திட பிரதமரிடம் நமது மத்திய சங்கம் 09/05/2017 அன்று கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது. நமது வேண்டுகோளைப் பரிசீலித்த பிரதமர் அலுவலகம் உரிய நடவடிக்கைக்காக 
DPE இலாக்காவிற்கு நமது சங்க கடிதத்தை அனுப்பியிருந்தது.

பொதுத்துறைகளில் ஊழியர்களுக்கான சம்பளக்குழு அமைப்பதற்கான வழிகாட்டுதலை வெளியிடுவதற்கு அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசின் கவனத்தில் இது இருந்து வருவதாகவும் DPE இலாக்கா 
நமது பொதுச்செயலருக்கு 31/05/2017 அன்று பதிலளித்துள்ளது. 

நமது ஜூலை தொடர் உண்ணாவிரதம் நமது கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும். எனவே DPE வழிகாட்டுதல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. பிரதமர் அலுவலகம் மூலமாக DPE இலாக்காவின் கவனத்தை ஈர்த்த மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment