Thursday 15 June 2017

AIBSNLPWA  NFTE   NFTCL
கண்டன ஆர்ப்பாட்டம் 


ஜூன்…15
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்…
ஆனால் கொடுமையிலும் கொடுமை…
பரமக்குடியில் ஓய்வு பெற்ற ஒரு மூத்த தோழர்…
அதே தினத்தில் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளார்…

பரமக்குடி பகுதியின் கண்ணியமிக்க தலைவரும்…
NFTE முன்னாள் மாநில உதவித்தலைவரும்…
NFTE முன்னாள் கிளைச்செயலரும்…
ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச்செயலரும்…
AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின்
பரமக்குடி கிளைப்பொருளரும்…மாவட்ட அமைப்புச்செயலரும்…
பரமக்குடி நுகர்வோர் அமைப்பின் தலைவரும்….
அனைவரின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான
ஓய்வு பெற்ற மூத்த தோழர்.இராமசாமி அவர்கள்...

15/06/2017 அன்று பரமக்குடி தொலைபேசி நிலையத்தில்…
அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது...
மூத்தோரை மதிக்கத்தெரியாத….
BSNLலில் பணிபுரியும் காட்டுமிராண்டி ஒருவனால்
மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்…

தாக்குதலில் பலத்த காயம் அடைந்து…
பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…
முன் விரோதத்தாலும்… தொழிற்சங்க காழ்ப்புணர்ச்சியாலும்..
தோழர். இராமசாமி மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் திட்டமிட்டு அதிகாரிகள் முன்னிலையில்..
அலுவலக வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டுள்ளது…
மிகவும் வேதனைக்குரியது… கண்டிக்கத்தக்கது…

பல ஆண்டுகள் இலாக்கா வளர்ச்சிக்கும்…
தொழிற்சங்கப்பணி மூலம் தோழர்களுக்கும்..
சலிப்பில்லாமல் பணி செய்த
ஒரு ஓய்வு பெற்ற மரியாதைக்குரிய மூத்த தோழரை 
வன்கொடுமை செய்திருப்பது…
மிக மிக அருவருக்கத்தக்க செயல்…
இந்த வன்செயல் அடியோடு களையப்பட வேண்டும்…
எனவே மூத்தோர் மீதான வன்கொடுமை எதிர்த்தும்….
தவறு செய்தவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும்…
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும்..

இன்று 16/06/2017 – வெள்ளிக்கிழமை 
மாலை 4 மணிக்கு
பரமக்குடி தொலைபேசி நிலையம் முன்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் 
நடைபெறும்…

மூத்தோரை மதிப்போம்….
மூத்தோர் மீதான வன்கொடுமை தடுப்போம்…
உணர்வோடு அணி திரள்வீர் தோழர்களே…
 --------------------------------------------------------------------------------------

தோழர்.இராமசாமி அலைபேசி – 94434 96114

No comments:

Post a Comment