Sunday 14 May 2017

NFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு


NFTCL திருச்சி மாவட்டச்செயற்குழு 
மாவட்டத்தலைவர் தோழர்.முத்து அவர்கள் தலைமையில்... 
இதமான சூழலில் 13/05/2017 அன்று காலை...
திருச்சி பொதுமேலாளர் அலுவலக கூட்ட அரங்கில்
புதிய எழுச்சியோடும் புத்துணர்வோடும் துவங்கியது...

சகுனம் பார்த்து சங்கடப்படுவதல்ல சங்கம். 
சலசலப்புகளை சந்திப்பதுதான் சங்கம்… 
சங்கடங்களை தீர்ப்பதுதான் சங்கம்… 
எனவே இன்னல்படும் 
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளைப் பற்றி 
இதயசுத்தியோடு செயற்குழு விவாதித்தது. 
வருங்கால கடமைகளை வகுத்தெடுத்தது. 
ஒப்பந்தஊழியர் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்திடவும்… 
NFTCL  அமைப்பை மேலும் வலுப்படுத்தவும்… 
போராட்டங்களில் முழுமையான பங்கெடுத்திடவும்….
NFTCL செங்கொடியை உயர... உயர...
உயர்த்திப்பிடிக்கவும் செயற்குழு உறுதி பூண்டது...

தோழர். முத்து தலைமையேற்க…
தோழர்மில்டன் மாவட்டச்செயலர் வரவேற்புரையாற்ற…
தோழர். மாரி  மாநில செயல்தலைவர் துவக்கவுரையாற்ற…
தோழர்  பழனியப்பன்  NFTE மாவட்டச்செயலர் – எதார்த்தயுரையாற்ற..
தோழர்  ஆனந்தன்  மாநிலச்செயலர் எழுச்சியுரையாற்ற..
தோழர்  காமராஜ் AIBSNLEA மாநில உதவிச்செயலர் ஆதரவுக்கரம் நீட்ட..

தோழர். பாலசுப்பிரமணியன் - மாநில உதவிச்செயலர்
தோழர். வில்லியம் ஹென்றி மாநில அமைப்புச்செயலர்
தோழர். ஆசைத்தம்பி  NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் மற்றும்
தோழர்ஜோசப் வில்லியம் கிளைச்செயலர் 
ஆகியோர் கருத்துரையாற்ற…

அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி…
பொதுமேலாளர் அலுவலத்தில் புதிய கிளை ஒன்றைத் துவங்கி..
மாவட்டப்பொருளர் தோழர். P.ஆறுமுகம் நன்றி நவில...
இயக்க உணர்வோடு இனிதே முடிந்தது...
NFTCL மாவட்டச்செயற்குழுக்கூட்டம்…

No comments:

Post a Comment