Friday 7 April 2017

ஒப்பந்த ஊழியர்
புதிய சம்பளம் அமுலாக்கம்

காரைக்குடி மாவட்டத்தில் 
கேபிள் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களின்
மார்ச் மாத சம்பளம் இன்று 07/04/2017
புதிய சம்பளத்தில்  பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு புதிய கூலி ரூ.350/- வீதம்
26 நாட்களுக்கு மொத்தச்சம்பளம் ரூ.9100/=.
இதில் EPF மற்றும் ESI பிடித்தம் ரூ.1251/-  போக
நிகரச்சம்பளம் ரூ.7849/= பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
பழைய சம்பளத்தை விட மொத்தமாக
ரூ.2600/- கூடுதலாகக் கிட்டியுள்ளது.
வைப்புநிதியாக ரூ.2184/= வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட சம்பளத்தை
உடனடியாக அமுல்படுத்திய
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு..
நமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்…

7ம்தேதி என்ற உரிய தேதியில்…
புதிய சம்பளத்தை பட்டுவாடா செய்த
கேபிள் ஒப்பந்தக்காரருக்கும்..
நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
ஏனைய ஒப்பந்தக்காரர்களும்
புதிய சம்பளத்தை விரைவில் பட்டுவாடா
செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
19/01/2017 முதல் 28/02/2017 வரையிலான
காலத்திற்கு சம்பள நிலுவையும்..
விரைவில் பட்டுவாடா செய்யப்படும்...

4 comments:

  1. சிறப்பாக செயல்படும் செயல் தலைவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சிறப்பாக செயல்படும் செயல் தலைவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete