Monday 13 March 2017

கலகம் செய்… கலகம் செய்…
காரைக்குடி NFTE மாவட்டச்செயற்குழு முடிவு

தோழமை… நேர்மை… உழைப்பு… என
தனக்கென தனித்துவம் கொண்ட
NFTE தமிழ் மாநிலச்சங்கம்…
ஜெகன் என்ற மாமனிதனால்...
கட்டி வளர்க்கப்பட்ட சங்கம்...
இன்று ஊழல்வாதிகளின்
புகலிடமாகப் போனது கண்டு
காரைக்குடி NFTE மாவட்டச்செயற்குழு
மிகுந்த கவலையும் மனவேதனையும் கொள்கிறது…

தொடர்ந்து சங்கத்தில் நடக்கும்
நேர்மையற்ற செயல்களை…
நேர்மையற்றவர்களின் செயல்களை…
கண்டும் காணாமலும் போவது…
இயக்கத்தை இழுத்து மூடும் செயலாகும்…

எனவே தமிழ்மாநிலச்சங்கத்தில்…
ஊழல்வாதிகளின் தலையீடு..
அடியோடு குறைய வேண்டும் என்பது
அடிமட்டத் தொண்டனின் முடிவாகும்…

அநியாயங்களை… அக்கிரமங்களை
அம்பலப்படுத்துங்கள்… அம்பலப்படுத்துங்கள்…
என்றார் மாமேதை லெனின்…

ஒருவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்து…
கற்பி.. ஒன்றுபடுத்து.. கலகம் செய் என்றார்
அண்ணல் அம்பேத்கார்….

உன்மத்தம் கொண்டோரையும்…
ஒடுக்குவோரையும் எதிர்த்து…
கலகம் செய்… கலகம் செய்.. கலகம் செய்..
என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார்…

எனவே அக்கிரமங்களை அம்பலப்படுத்துவது…
உணர்வுள்ளவர்களை ஒன்றுபடுத்துவது…
ஊழலுக்கு எதிராய்க் கலகம் செய்வது என
காரைக்குடி மாவட்டச்செயற்குழு
உரங்கொண்ட மனதோடு…
உணர்வு கொண்ட நெஞ்சோடு…
ஒரு மனதாக முடிவு செய்கிறது…

கயமை தொடருமானால்…
கலகமும் தொடரும்…
இதுவே எங்கள் பிறவிக்குணம்….

1 comment:

  1. காரைக்குடித் தோழர்களின் மன உறுதி மற்ற மாவட்டத்தில் உள்ள நேர்மையாளர்களை ஒன்று சேர்க்கும். இரண்டு பெரிய இடதுசாரி சிந்தனை உள்ள சங்கங்கள் தங்கள் தளத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளையே ஒழிக்க முடியவில்லைஎனில் சமுகத்தில் நிலவும் ஊழலை எப்படித் தடுக்க இயலும்? உறுதி யாகப் போராடுவீர். ஊழலுக்குக் காவல் நிற்போரை அம்பலப் படுத்துவதும் புரட்சிகரக் கடமைகளுள் ஒன்றுதான். தொடரட்டும் உங்கள் சமர்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete