Friday 3 February 2017

இராமநாதசுவாமியின் அன்பு மகன்
இராக்கப்பன் மறைந்தான்…
 
இராமநாதசுவாமியின் அன்பு மகன்
இராக்கப்பன் மறைந்தான்…

இராமேஸ்வரத்தில் CARE TAKER 
பணிவிடை ஊழியனாகப் பணிபுரிந்த
தோழர். இராக்கப்பன் TM
இன்று 04/02/2017 உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

இமைகளின் ஈரத்தை நம்மால் உலர்த்த இயலவில்லை…
இராக்கப்பன்...
இந்திய தேசத்தின் பாழாய்ப்போன 
சாதிய அடுக்குமுறையில்...
ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மனிதனாய்ப் பிறந்தான்…

நந்தனாரின் வாரிசாகப் பிறந்தான்..
அண்ணல் அம்பேத்காரின் வாரிசாக வளர்ந்தான்…

சுயமரியாதையில் பிடிப்பும்…
சிவப்பில் ஈர்ப்பும் கொண்டு வாழ்ந்தான்…

போன்மெக்கானிக் என்ற பதவியில் இருந்தாலும்…
அனைவரையும்.. 
ஆண்டவன் சந்நிதிக்கு அழைத்துச்செல்லும்  
பணிவிடை ஊழியனாகப் 
பொறுப்பேற்றுப் பணிபுரிந்தான்…

எந்தக் கோவிலுக்குள்..
இராக்கப்பனின் முன்னோர்கள் 
நுழைய மறுக்கப்பட்டார்களோ…
அந்தக்கோவிலுக்குள்…
இந்திய தேசம் முழுமையும் இருந்து வந்த
அதிகாரிகளையும்.. ஊழியர்களையும்…
தலைவர்களையும்… தொண்டர்களையும்…
அழைத்துச்சென்று 
மாலை மரியாதை செய்வித்தான்…
நந்தனாரின் வாரிசு இராக்கப்பன்
எந்த நிந்தனையும் இன்றி..
நித்தமும் கோவிலுக்குள் சென்று 
தன்னை தரிசனம் செய்ததால்..
இராமேஸ்வரம் இராமநாதசாமியும் 
நித்தமும் மகிழ்வுற்றார்…

அவனை அந்தப்பணியில் இருந்து அப்புறப்படுத்த
எத்தனையோ முயற்சிகள்… நடைபெற்றன..
அத்தனையையும் தாண்டி..
அவனையும் அவ்வப்போது அமைதிப்படுத்தி…
இறுதி வரை… அவனுக்கு
இராமநாதசுவாமியின் தரிசனம் பெற வைத்ததில்..
எல்லோருக்கும் அவன்
இராமநாதசுவாமியின் தரிசனம் தர வைத்ததில்..
நமது சங்கத்தின் பங்கு முழுமையாக இருந்தது…
அது சங்கக்கடமை மட்டுமல்ல…
அதை நமது சமூகக்கடமையாகவும்.. வரித்துக்கொண்டோம்…

இராக்கப்பனின் மறைவிற்கு
நமது மனங்கசிந்த
இரங்கலை உரித்தாக்குகிறோம்.
===============================================
தோழர்.இராக்கப்பனின் மறைவையொட்டி 
இன்று பரமக்குடியில் நடைபெறவிருந்த 
NFTE மாவட்டச்செயற்குழு ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment