Monday 6 February 2017

அனைத்து சங்க கூட்ட முடிவுகள் 

06/02/2017 அன்று NFTE  பொதுச்செயலர் தோழர்.C.சிங் அவர்கள் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. BSNLEU  பொதுச்செயலர் தோழர்.அபிமன்யு அவர்கள் 
நாம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

முடிவுற இருக்கும் நிதியாண்டில் BSNLன் வருவாயை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து அதிகாரிகளும்... ஊழியர்களும் 
தினமும்  கூடுதலாக ஒரு மணி நேரம் பணி செய்வது...
விற்பனையை அதிகரிப்பது  ... 
சேவையை மேம்படுத்துவது என்பது நோக்கமாகும். 

கூடுதல் பணிக்காலம் 
10/02/2017 முதல் 31/03/2017 வரை கடைப்பிடிக்கப்படும்.

  • BSNL  நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் பிரதமர் அலுவலகத்தின் முயற்சியைக் கைவிடக்கோரி...
  • செல் கோபுரங்களைப்பிரித்து  துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியைக் கைவிடக்கோரி 
  • 4G அலைக்கற்றையை BSNLக்கு இலவசமாக வழங்கக்கோரி 
  • Reliance Jio நிறுவனத்திற்கு சலுகைகள் காட்டும் அவலத்தை நிறுத்தக்கோரி...

மார்ச் 9 அன்று...
ஆளுநர் மாளிகை நோக்கி...
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி...
நகராட்சி அலுவலகம் நோக்கி...
நாடு தழுவிய பேரணி...

தோழர்களே... ஒன்றுபடுவோம்... 
BSNL காப்போம்... தேசம் காப்போம்...

No comments:

Post a Comment