Tuesday 3 January 2017

மத்திய சங்க செய்திகள் 

நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தும், அதிகாரிகளை  நேரில் சந்தித்தும் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளது. 

  • டிசம்பர் 15 வேலை நிறுத்தம் அரசின் தவறான முடிவினால் ஏற்பட்டது. எனவே வேலை நிறுத்தத்திற்கு சம்பளப்பிடித்தம் கூடாது என நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
  •  JAO இலாக்காத்தேர்வில் தவறாக   கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்குவது பற்றி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. மனித வள இயக்குநரின் ஒப்புதலுக்கு பரிந்துரை காத்துக்கிடக்கின்றது.
  • பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத்திருத்தம் பற்றி உரிய வழிகாட்டுதல்களை உடனடியாக வழங்கிடக்கோரி DOT மற்றும் DPE இலாக்கா செயலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
  • BSNL  அறிவித்துள்ள ஊதிய திருத்தக்குழுவில் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை உடனடியாக சேர்க்கக்கோரி CMDயிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment