Friday 20 January 2017

எழுச்சி... மகிழ்ச்சி... நெகிழ்ச்சி...

தமிழகம் கற்றுக்கொடுக்கிறது…
சொல்கிறார் NDTV இயக்குநர்….

கற்றுக்கொள்ளும் மாணவர்கள்…
இன்று உலகிற்கு
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்…

காளைகள் மட்டுமே… கருப்பொருளல்ல…
பன்னாட்டுக் கொள்ளை அம்பலமாகிறது…
CORPORATE கலாச்சாரம் கிழிக்கப்படுகிறது…
மதவாதம் சாதிபேதம் உடைக்கப்படுகிறது…

அரியணை தந்ததும் முகநூலே…
போலிகளை அம்பலமாக்குவதும் முகநூலே…

தகவல் தொடர்பு….
மனத்தை பிணைத்தது…
இனத்தை இணைத்தது…

போராடும் மனிதனுக்கு
சாதி இல்லை… மதமில்லை…
கொள்கை உண்டு… கோஷம் உண்டு…
நமது ஆண்டாண்டு கால முழக்கத்தை
காதால் கேட்டோம்…
இன்று கண்ணால் கண்டோம்…

மனதிலே ஜல்லிக்கட்டு..
மத்தாப்பாய் மலரக்கண்டோம்…

தமிழ்க்குடிகளின் தன்மானம் காக்க
தமிழகம் ஓரிடம் கூடி விட்டது…

இது பாரதப்போர்….
நம் பண்பாட்டுப்போர்…
பாரதப்போர் பதினெட்டு நாள்…
நம் பண்பாட்டுப்போர்….
இன்று நான்காம் நாள்…
நம் உரிமையை எட்டும் நாள்…

தை பிறந்தால் வழி பிறக்கும்…
இது.. தமிழர்களின் நம்பிக்கை…

இதோ… தை பிறந்தது…
ஒரு வழி பிறந்தது…

அடங்கி விடும் இனமல்ல… தமிழர் இனம்…
முடங்கி விடும் இனமல்ல தமிழர் இனம்…
தொடங்கி விடும் இனமே நம் தமிழினம்…

No comments:

Post a Comment