Wednesday 18 January 2017

எழுந்தது... இளையபாரதம்...

எழுந்தது…… இளைய பாரதம்...

மாணவர் சக்தி மாபெரும் சக்தி…
இது… தானே எழுந்த சக்தி…
இதுதானே நம் எதிர்கால சக்தி…

தமிழகம் முழுவதும்…
தடைகளைத் தகர்க்குது மாணவர் படை…

தேரோடும் வீதிகளில் போராட்டம்….
காரோடும் சாலைகளில் போராட்டம்…
இரயிலோடும் பாலங்களில் போராட்டம்…
அலையாடும் கடலோரங்களில் போராட்டம்…

தடைக்கற்களே… படிக்கற்கள்..
கொதிக்கும் தரை…
குளிரும் பனி…
தவிக்கும் நாவு
தகிக்கும் வயிறு…
மிரட்டும் காவல்துறை…
அரட்டும் கல்லூரித்துறை…
எல்லாம் இங்கே…
மோடியின் செல்லாநோட்டுக்கள்…

பசி நோக்கவில்லை…
கண் துஞ்சவில்லை…
கண்ணான மாணவ மணிகள்..
கருமமே…கண்ணாயினர்…

நூறு இளைஞர்களைக் கொடுங்கள்…
தேசத்தை மாற்றுகிறேன்...என
சுவாமி விவேகாநந்தர் சொன்னார்…
இதோ…
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்…
அல்லும் பகலும் அயர்வில்லாத இளைஞர்கள்…

வீரத்துறவியே… எழுந்து வா…
எங்களோடு இணைந்து வா…

நீ கண்ட இளையபாரதம்…
இதோ எழுந்து விட்டது…
மாற்றுவோம்… தேசத்தை
ஏற்றுவோம்… ஒளி தீபத்தை…

2 comments: