Tuesday 13 December 2016

நெஞ்சம் நிறைந்த  NFTCL  மாவட்ட மாநாடு 

காரைக்குடி மாவட்ட NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் 
முதலாம் மாவட்ட மாநாடு தோழர்கள்.லால்பகதூர் மற்றும் முருகன் தலைமையில் பாரதி பிறந்த 11/12/2016 அன்று காரைக்குடி 
கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
NFTCL பொதுச்செயலர் தோழர்.CK.மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

இது மாவட்ட மாநாடு அல்ல... 
நடக்கப்போகும் மாநில மாநாட்டின் 
முன்னோட்ட மாநாடு என்று சொல்லுமளவு...
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 
தலைவர்களும்...தோழர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் 
மாநிலப்பொருளர் தோழர்.சுப்பராயன் 
சென்னைத் தொலைபேசி தோழர்.இளங்கோ 
மதுரை மாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன் 
நெல்லை மாவட்டச்செயலர் தோழர்.கணேசன் 
திருச்சி AIBSNLOA மாவட்டச்செயலர் தோழர்.காமராஜ் 
முன்னாள் மாநிலப்பொருளர் தோழர்.அசோக்ராஜன்
மாநிலச்சங்க நிர்வாகிகள்...
தோழர்கள் புதுக்கோட்டை  ஆசைத்தம்பி. கரூர் ஆறுமுகம், 
தென்காசி சண்முகம், சுபேதார் அலிகான்,
காரைக்குடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
மூத்த தோழர்கள் பூபதி,நாகேஸ்வரன்...
அஞ்சல் தோழர்.கருப்பசாமி மற்றும் ஏராளமான தலைவர்களும் தோழர்களும் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சினைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்தனர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் 
புதிய நிர்வாகிகளாக  ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டத்தலைவர் : தோழர். S.முருகன் -STS ஓய்வு - காரைக்குடி 
மாவட்டச்செயலர்   : தோழர். B.முருகன் - TT  - சிவகங்கை 
மாவட்டப்பொருளர்: தோழர். L.வீரசேகர் - CL - காரைக்குடி .

புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் பல காலம் கவனிப்பாரற்று... கேட்பாரற்றுக் கிடந்த 
ஒப்பந்த ஊழியரின் உரிமைகளை  மீட்கும்  போராட்டத்தில்...
 NFTCL உளப்பூர்வ ஈடுபாட்டுடன் தன்னை முன்னிறுத்தி...
 ஒப்பந்த ஊழியரின் வாழ்வு மேம்படுத்திடும் பணியில்  
அர்ப்பணிப்புடன் செயல்பட   வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment