Friday 30 December 2016

காய்வது பயிறு... காந்துவது வயிறு...
எலி தின்னும் இழிநிலை சொல்லி
 திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 

மாடு கட்டிப் போரடித்தால் 
மாளாது செந்நெல் என்று 
யானை கட்டிப் போரடித்த தமிழகத்தில்...
பச்சைப் பயிர் வாடிக்  கிடக்கிறது...
பாழும் வயிறு   காய்ந்து கிடக்கிறது...

சோறு போடும் விவசாயிக்கு 
சோதனைகள் ஏராளம்...

வறண்டு போன வயலிலே... விவசாயிகளுக்கு...
குனிந்து வேலை செய்ய  வழியில்லை...

நாசம் போகும் நாட்டிலே  மந்திரிகளுக்கு...
குனிந்து நிமிரவே நேரமில்லை...

ஏர் உழும் விவசாயிக்கு... 
எலிக்கறிதான் மிச்சம்...

ஏய்த்துப்பிழைப்பவன் வீட்டிலே...
எந்நாளும் வெடிச்சத்தம்...

No comments:

Post a Comment