Friday 16 December 2016

பற்றுதலைக் காட்டிய பத்து தலைகள் 
டிசம்பர் - 15...
BSNL  காக்கும் போராட்டத்தில்....
தேசம் முழுவதும் ஊழியர்கள்... அதிகாரிகள்... 
ஓர் குலமாய்... ஓர்  நிறையாய்... ஓரணியாய் 
ற்றுமையாய் ... நின்று.. 
ஒன்று பட்டுப்போராடி வரலாறு  படைத்துள்ளனர்...

காரைக்குடியில்....
ஒட்டுமொத்தமான வேலை நிறுத்தம்...
ஒப்பந்த ஊழியர்கள் போன்ற சிறுதலைகளும் 
உணர்வோடு வேலை நிறுத்தத்தில் கலந்துள்ள போது...
பத்தே பத்து தலைகள் மட்டும் பணி செய்து 
பணத்தின் மீதுள்ள தங்கள் பற்றுதலை...
படமெடுத்துக் காட்டியுள்ளனர்...

அவர்களைப் பட்டியலிட நமக்கு விருப்பமில்லை...
அவர்களுக்கு அன்பான வேண்டுகோளை மட்டும் விடுக்கிறோம்...

சுவர் இருந்தால்தான் சித்திரம்...
BSNL  இருந்தால்தான் சம்பளம்...
ஊரே பற்றி எரிகையில்...
ஒரு சிலர் மட்டும்...ஒதுங்கி நின்று புகை பிடிப்பது...
ஊனமான  செயலாகும்...

வருங்காலங்களிலாவது... 
உணர வேண்டும்... திருந்த வேண்டும்...

No comments:

Post a Comment