Wednesday 14 December 2016

டிசம்பர் -15
திட்டமிட்டபடி போராட்டம் 

நாளை 15/12/2016 அனைத்து தொழிற்சங்கங்களும் 
பங்கு பெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 
திட்டமிட்டபடி நடந்தேறும்.

வேலை நிறுத்தம் சம்பந்தமாக
இன்று 14/12/2016 DOT  கூடுதல் செயலருடன்
 அனைத்து சங்கப்பிரதிநிதிகளின் சந்திப்பு நிகழ்ந்தது. 

துணை நிறுவனம் துவக்குவது சம்பந்தமாக DOT  கூடுதல் செயலர் 
அனைத்துத் தொழிற்சங்கப்பிரதிநிதிகளிடமும்  
ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக  விளக்கவுரையாற்றினார்.

துணை நிறுவனம் தொடர்ந்து முழுமையான 
பொதுத்துறையாக  BSNL  வசமே தொடருமா? 
அல்லது  நாளடைவில் தனியார் மயமாகுமா?  
என்ற ஊழியர் தரப்புக் கேள்விக்கு 
அவரால் விடையளிக்க இயலவில்லை. 

எனவே திட்டமிட்டபடி 
நமது வேலை நிறுத்தம் நாளை நடைபெறும்.
BSNL காக்கும் இந்தப்போராட்டத்தில் 
நமது பங்கை முழுமையாகச் செலுத்துவோம்.

No comments:

Post a Comment