Sunday 20 November 2016

சம்பள முன்பணம் 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற 
அரசின் அறிவிப்புக்குப் பின்  நாட்டு மக்கள் அனைவரும் 
வங்கி வாசல்களில் தவமாய்த் தவம் கிடக்கின்றனர். 

இந்நிலையில் நவம்பர் மாதச்சம்பளம் மற்றும்
 ஓய்வூதியப் பட்டுவாடா அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது. 
ஏறத்தாழ 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களுக்கும், 
58 லட்சம் ஓய்வூதியர்களுக்குமாக ஒரு கோடிப்பேருக்கு  
இம்மாதம் சம்பளப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். 

எனவே... இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 
இந்த மாதம் ரூ.10,000/= சம்பள முன்பணமாக கொடுப்பதற்கு 
மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இதற்கான அறிவிப்பை 
நிதி அமைச்சகம் 17/11/2016 அன்று அறிவித்துள்ளது. 

சம்பள  முன்பணம் CASH பணமாகப் பட்டுவாடா செய்யப்படும். 
மீதமுள்ள சம்பளம் வழக்கம்போல் வங்கிக்கணக்கில் போடப்படும். 
சம்பள முன்பணம் அதிகாரிகளுக்கு கிடையாது.
சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் தங்களது 
விருப்பத்தை எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும். 

No comments:

Post a Comment