Monday 24 October 2016

காலியாகும் காரைக்குடி 

நிலப்பரப்பில் விரிந்து பரந்த 
காரைக்குடித்  தொலைத்தொடர்பு மாவட்டம் 
ஊழியர் எண்ணிக்கையில் 
மிகவும் குறைவான தொகையைக் கொண்டது.  

கணக்கில் குறைந்த காரைக்குடி மீது 
காலன் கண் வைத்து விட்டான் போலும்... 
அக்டோபர் மாதம்.. 
அடுத்தடுத்து இரண்டு தோழர்கள்
அகால மரணம் அடைந்தனர். 

இருவருமே குடிக்கு ஆளாகி இன்னுயிர் நீத்தவர்கள்...
இதோ அடுத்ததாக... மூன்றாவதாக... 
24/10/2016 அன்று...
உச்சிப்புளி தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.ஞானோதயம் TTA என்பவர் 
அகாலத்தில் உயிர் நீத்தார்...
காரணம் வழக்கமானதுதான்... 
குடி காரைக்குடியில் 
மூன்று குடிகளை இம்மாதம் கெடுத்துள்ளது. 
மூவரும் 50 வயதுக்காரர்கள். 
மூவரும் மூன்று சங்கங்களையும் சேர்ந்தவர்கள். 
மூவரும் வாழ வேண்டியவர்கள். 
மூவரும் தங்களது குடும்பத்தை வாழ வைக்க வேண்டியவர்கள். 
இவர்கள் தவிர...
இன்னும் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 
இவர்கள் திருந்துவதற்கான... 
இவர்களைத் திருத்துவதற்கான 
சாத்தியக்கூறுகள் சத்தியமாக இல்லை. 
காரைக்குடி நிலவரத்தைக் கண்டு 
ஆயுள் காப்பீட்டுக்கழகம் அதிர்ச்சியில் உள்ளதாக அறிகிறோம்.

இம்மாதம் இறந்த மூவரையும் தவிர... 
இரண்டு தோழர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். 
பெருங்குடியில் விருப்பம் கொண்ட அந்த இருவரையும் 
அவர்களது குடும்பத்தினர் கட்டாயமாக 
விருப்ப ஓய்வு கொடுக்க வைத்துள்ளனர்.  
இம்மாதம் இயற்கையாக 
இரண்டு தோழர்கள் ஓய்வு பெறுகின்றனர். 

ஆக மொத்தம் அக்டோபரில் 
காரைக்குடியில் எண்ணிக்கையில் ஏழு குறைகிறது. 
ஏழரை குறைய வேண்டும் என்பதே நமது விருப்பம்...

No comments:

Post a Comment