Tuesday 27 September 2016

இன்குலாப்... ஜிந்தாபாத்...
1928.. நவம்பர்..
தோழர் பகத்சிங் தனது தோழர்களுடன்...
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்கின்றார்

காங்கிரஸ் மாநாட்டில்...
தலைவர்களின் ஓயாத பேச்சுக்கள்...
உருப்படியில்லாத தீர்மானங்கள்...
நம்பிக்கை தராத நடவடிக்கைகள்...
இளைஞர்களுக்கு அலுப்புத் தட்டுகிறது...
மாநாட்டை விட்டு வெளியே வருகிறார்கள்...
எங்கே செல்வது?

கண்ணிலே காட்சி ஒன்று படுகிறது...
UNCLE TOMS CABIN என்ற
ஆங்கிலத் திரைப்பட விளம்பரம்...
ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துயரை
வெள்ளைத்திரையில் அந்தப்படம் விவரித்தது...
சலிப்பூட்டும்  மாநாட்டை விட்டு... வெளியேறி
உணர்வூட்டும் திரைப்படம் காண 
தோழர்களுடன் பகத்சிங் சென்றார்...

சலிப்பூட்டும் பேச்சுக்கள்...
உருப்படியில்லாத தீர்மானங்கள்...
நம்பிக்கையற்ற நடவடிக்கைகள்...

இன்றும் நாம் இந்த காட்சியைக் காணலாம்...

1929 - ஏப்ரல் 8..
நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திலே..
மோதிலால் நேரு.. முகமது அலி ஜின்னா.. வீற்றிருக்கிறார்கள் ..
இரண்டு மசோதாக்களை நிறைவேற்றும் முகத்தான்
அமைச்சர் அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்...

ஒன்று...
யாரையும் கைது செய்யலாம்...
விசாரணை இன்றி சிறையில் அடைக்கலாம்.. என்பது..

இரண்டாவது...
தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் 
பறிக்க வகை செய்வது...

இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்த்து...
நாடாளுமன்றத்தின் நடுப்பகுதியிலே...
இரண்டு குண்டுகள் வீசப்படுகின்றன... 

யாருக்கும் காயமில்லை...
ஆனாலும் நாடாளுமன்றம் பதை பதைத்து விட்டது...
காவலர்கள் காரணம் புரியாமல் விழிக்கிறார்கள்...
அப்போது அந்தக்குரல்... ஓங்கி ஒலிக்கிறது...
இன்குலாப்... ஜிந்தாபாத்...
அங்கே.. பகத்சிங் கையில் துப்பாக்கியோடு...
கண்ணில் விடுதலை நெருப்போடு..
தன் தோழன் தத் என்ற இளைஞனோடு ..
தன்மான உணர்வோடு கொழுந்து விட்டு நிற்கிறான்..

அன்று அவன் எழுப்பிய முழக்கம்தான்.. 
இன்றும் என்றும் தொழிலாளி வர்க்கத்தின் 
உரிமை கீதம்...
இன்குலாப் ஜிந்தாபாத்... புரட்சி ஓங்குக...
இன்றும் தொழிலாளிக்கு எதிரான சட்டங்கள் 
நாட்டிலே... நாடாளுமன்றத்திலே இயற்றப்படுகின்றன...
ஆனால் வீறுகொண்டு வெடிகுண்டு வீச பகத்சிங்தான் இங்கில்லை...

தொழிலாளி வர்க்க விரோத சட்டத்தை 
எதிர்த்து நாடாளுமன்றத்தை அதிரவைத்த...
மாவீரன் பகத்சிங் நினைவுகளை 
அவன் பிறந்த செப்டம்பர் 28ல் நினைவு கூர்வோம்...

பகத்சிங் பிறந்த தின 
சிறப்புக்கூட்டம் 

28/09/2017 - புதன் மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம்  - காரைக்குடி.

தலைமை: தோழர். இரா.பூபதி

சிறப்புரை : தோழர். 
N.இரவிச்சந்திரன் 
தமிழாசிரியர் - SMS மேல்நிலைப்பள்ளி - காரைக்குடி.

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment