Tuesday 23 August 2016

கல்கத்தா...காலிகள்...
அடித்து உடைக்கப்பட்ட மேற்கு வங்க மாநில  BSNLEU சங்க அலுவலகம் 

கல்கத்தாவில் உள்ள  மேற்கு வங்க மாநில 
BSNLEU சங்க அலுவலகம் 19/08/2016 அன்று
 திரிணமுல் குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

கேடு கெட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தை 
நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 
 ஆட்களை அடிப்பதாலோ... அலுவலகத்தை நொறுக்குவதாலோ..
ஒரு இயக்கத்தை யாரும் முடக்கி விட முடியாது. 
மாறாக அது முன்னிலும் வீறு கொண்டுதான் எழும். 
இதுதான் காலம் காலமாக நாம் காணும் வரலாறு. 

கல்கத்தா என்பது கோபம் கொண்ட  காளியின் இருப்பிடம்
தற்போது குரோதம் கொண்ட  காலிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது.
இந்தக் கோழைத்தனத்தை எதிர்த்து இன்று 24/08/2016 நாடு முழுவதும் BSNLEU  சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

சக சங்கம் என்ற முறையில்.. சகோதரச்சங்கம் என்ற முறையில் 
நமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்துவது நமது கடமையாகும். 
காரைக்குடியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 
நாமும் பங்கு பெறுகிறோம்...

தொழிற்சங்கங்கள் தொண்டர்களால் வளர்க்கப்படுவது...
குண்டர்களால் அல்ல... 

1 comment:

  1. மிகச் சரியான எதிர் வினை.மாலி

    ReplyDelete