Friday 19 August 2016

ஒன்று படுவோம்... வென்று காட்டுவோம்..

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு...
என்பது பால பருவத்தில்  மனதில்  
பசுமரத்தாணியாய் பதிந்த ஒன்று...

உலகத்தொழிலாளர்களே...ஒன்றுபடுங்கள்...
என்பது தோழமை வாழ்வின் துவக்க முழக்கம்...

புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே...
ஒப்புரவின் நல்ல பிற...
என்பது வள்ளுவர் வாக்கு...

ஒற்றுமை என்னும் ஒப்புரவின் பெருமை சாற்ற
வள்ளுவர் ஒப்புரவறிதல் என்னும் அதிகாரம் தந்தார்...

ஒத்த தறவோன் உயிர் வாழ்வான் மற்றையான்...
செத்தாருள் வைக்கப்படும்..

என்னும் வள்ளுவர் 
ஒற்றுமையின் பெருமை அறியாதவர்களை
செத்தவருக்கு சமமாகக்கூறுகிறார்...

எதற்கு ஒற்றுமை பற்றி இத்தனை...
என்று நீங்கள் கேட்கக்கூடும்...

வரும் 24/08/2016 அன்று டெல்லியில்..
போனஸ் குழு கூடுகிறது...
NFTE சங்கமும் BSNLEU சங்கமும்..கலந்து கொள்கின்றன...

நிர்வாகக்கணக்கு  ஓரிலக்கமோ... ஈரிலக்கமோ...
ஒற்றுமை என்னும் நான்கெழுத்தில்...
இரண்டு சங்கங்களும் இணைந்து நின்று போராடினால்...
போனஸ்  என்னும் மூன்றெழுத்தை...
நான்கிலக்கத்திலும் பெறலாம்... 
ஐந்திலக்கத்திலும் பெறலாம்...
தேவை எல்லாம் ஒற்றுமையே...

அதோ.. 
அந்த எருமைகளுக்குப் புரிந்தது...
நமக்குப் புரியாதா?

2 comments:

  1. ஒற்றுமை பிறக்கட்டும் தொழிலாளி நலன் கிடைக்கட்டும்

    ReplyDelete
  2. தொழிலாளி ஒற்றுமை ஒங்குக.........

    ReplyDelete