Thursday 25 August 2016

வாழ்த்துக்கள்... பல...

ஆகஸ்ட் - 26
ஈரோடு மாவட்ட மாநாடு...
அன்புத்தோழர். குமார் பணி நிறைவு பாராட்டு...
சேவைக்கருத்தரங்கம்...
உதவும் உள்ளங்களின் உதவிகள் வழங்கும் விழா...

ஈரோட்டிற்கு....
காரைக்குடி மாவட்டச்செயலராக...
வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டோம்..
அதே தினத்தில்...
தாய் மாமனாக..
தங்கையின் புதல்விக்கு..
வாழ்க்கை உரை எழுதப் பணிக்கப்பட்டோம்...

சங்கமும்.. சங்கடமும்... 
சமமாக கலந்ததுதான் நம்  வாழ்வு...

இந்தாலும்...
இருக்கவே... இருக்கிறது...இணையதளம்...
இருந்த இடத்தில்  இருந்தபடியே  வாழ்த்தி விடலாம்...

ஈரோடு...
பாசறைகளின் உறைவிடம்...
பகுத்தறிவின் பிறப்பிடம்...

ஈரோடு...
வண்ணங்களின் நகரம்...
மங்களம் சொல்லும் மஞ்சள்...
சிந்தனை  சொல்லும் கருப்பு...
மனிதம்  சொல்லும் சிவப்பு...

ஈரோடு..
NFTE.. இயக்கத்தின்  இதயம்..
இதயத்தை  இயக்கிடும்  மூளை...

ஈரோட்டுத்  திசையில்தான்..
இயக்கப்படகு செல்லும்...
ஈரோட்டின்   கையில்தான்
இயக்கத்தின்  சுக்கான் இருக்கும்..

ஈரோட்டுக்கு 
இரண்டு கண்கள்...
இயக்கமும்... நிறுவனமும்...

ஈரோடு...
நெற்றிக்கண் திறந்தாலும்..
குற்றம் கடியும்... 

ஈரோடு...
அரியணையில் சில நாள் தங்கியது..
அரியணைகளைப் பல நாள்  தாங்கியது...

ஈரோடு..
அஞ்சுவதற்கு அஞ்சும்...
கொடுமை கண்டால் மிஞ்சும்..
ஒரிஜினல் அஞ்சா நெஞ்சம்...

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்..
இது ஈரோட்டுக்காக   எழுதப்பட்ட  குறள்....

ஈரோடு...
விழுதுகளைத் தந்த  ஆலமரம்...
விழுமியங்களைக் கொண்ட போதிமரம்..

ஈரோடு...
மனதிலே தங்கம்...பெயரிலே மகாலிங்கம்...
காவல் தலைவனின்..   
கொள்கைக் காதல்கோட்டை..

தஞ்சையின் காவிரி பொய்க்கலாம்...
மதுரையின் வைகை மரிக்கலாம்...
ஈரோட்டின்... 
மனித ஈரம்... அன்புச்சாரம்...
இயக்கத்தீரம்... கொள்கை வீரம்..
என்றும் மாறாது... மறையாது...

மகாலிங்கம் தலைமையேற்க...
குமா(ர)ர் நிறைவு கொள்ள...
ஜெயராமன் சிறப்புச்செய்ய...
நடராஜ நர்த்தனம்..
நலமுடன் நடந்தேற.. வாழ்த்துகிறோம்...

வாழ்க... இயக்கம் சுமந்த தோள்கள்...
வளர்க... இயக்கம் தாங்கும் கால்கள்...

அன்பு  வாழ்த்துக்களுடன்...
காரைக்குடி மாவட்டச்சங்கம்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் ஈரோடு தோழர்களுக்கு

    ReplyDelete