Friday 12 August 2016

ஆகஸ்ட் -12 - ஆர்ப்பாட்டம் 

போனஸ் வழங்குதல்... ஊதியக்குழு உருவாக்குதல்..  மற்றும் பொதுத்துறைகளை விற்கத்துடிக்கும் நிதி ஆணையத்தின் மோசமான நிலைபாட்டைக் கண்டித்தும் 12/08/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மாவட்டத்தலைவர் தோழர்.லால் பகதூர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

 மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான், 
கிளைச்செயலர்கள் தோழியர்.கார்த்திகா, தோழர்.ஆரோக்கியதாஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச்செயலர். தோழர்.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். 

வரும் செப்டம்பர் வேலை நிறுத்தத்தை 
முழு வீச்சில் நடத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment