Friday 1 July 2016

தமிழகத்தில் மாவட்டங்கள் 
வணிகப்பகுதிகளாகப்  பிரிப்பு 
SSAs into  BUSINESS AREAS in  TAMILNADU

 தமிழகத்தில் ERP  முழுமையாக அமுலானதைத் தொடர்ந்து தற்போதைய SSA  எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் 
BUSINESS AREA எனப்படும் வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு
டெல்லி தலைமையாகத்தால்  உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் கீழ்க்கண்டவாறு 10 வணிகப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------
வணிகப்பகுதி           இணைக்கப்படும் மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------
கோவை                    - நீலகிரி 
மதுரை                      - காரைக்குடி 
நாகர்கோவில்        - திருநெல்வேலி 
பாண்டிச்சேரி          - கடலூர் 
சேலம்                        - தர்மபுரி 
தஞ்சாவூர்                 - கும்பகோணம்       
தூத்துக்குடி               - விருதுநகர் 
வேலூர்   
ஈரோடு 
திருச்சி     
-------------------------------------------------------------------------------------------------------------
  • வேலூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழக்கம் போல்  தனித்து செயல்படும். சிறிய 7 மாவட்டங்கள் பெரிய   மாவட்டங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளன.
  • வணிகப்பகுதிகள் மனிதவளம்,நிதி,திட்டம் மற்றும் பொருள் கொள்முதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

  • இணைக்கப்பட்ட சிறிய மாவட்டங்கள்  வலைப்பின்னல் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
  • வணிகப்பகுதிகள் உருவாக்கத்தால் ஊழியர் மாற்றல் இருக்காது. ஊழியர்களுக்கான மாற்றல் எல்லை பழைய SSA என்ற அளவிலேயே இருக்கும்.

  • 20/08/2016க்குள் மேற்கண்ட வணிகப்பகுதி உருவாக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment