Friday 29 July 2016

செம்பணி சிறக்க வாழ்த்துக்கள் 
சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன் 
கலை வளர்ப்பது  காரைக்குடி..  
தலை வளர்ப்பது தஞ்சாவூர்...
கலையும் தலையும் வளர்ப்பது கடலூர்...

கடலூர்  ஜெயராமன்...
கடலூர்  கண்ட கலைஞர்...
கடலூர்   நின்ற தலைவர்...

கடலூர்  ஜெயராமன்...
இலக்கியப்பணியில் சிறந்த ராமன் 
இயக்கப்பணியில்  சிவந்த ராமன்....


கடலூர்  ஜெயராமன்...
பாசங்களை   கோவிக்காத ராமன்.. 
பாதங்களை  சேவிக்காத ராமன்...

கடலூர்  ஜெயராமன்...
பட்டாபிஷேகம் பார்த்திடாத  ராமன் 
நெருப்பில் சீதையை நிறுத்திடாத  ராமன்..

கடலூர்  ஜெயராமன்...
வனவாசத்தில் வாடாத ராமன்.. 
சுகவாசத்தை  நாடாத ராமன்...
சகவாசத்தை என்றும் பிரியாத ராமன்...


இயக்கத்தில்  தொண்டனே...
இலக்கியத்தில் மன்னனே...
சம்மேளனச்செயலரே...
வாழ்க... பல்லாண்டு...

2 comments: