Monday 25 July 2016

நம்பிக்கையோடு... நட..ராஜா..
தோழர்.நடராஜன் - மாநிலச்செயலர் 
கலகத்தில் மாலை கழுத்தில் விழப்பெற்றவனே  ..
காட்டு வழி பயணம் போகும்...
கறுப்புச்சட்டைக்காரனே...

ஓநாய்கள் கூட்டமாய் வரும்.. கூட்டுறவாய் வரும்...
நேர்மை என்னும் நெருப்பேந்தி...
நாய்களை  விரட்டு... ஓநாய்களை  விரட்டு...

நக்கி வாழும்... நாக்கால் வாழும்.. நரிகள் வரும்..
நம்பிக்கழுத்தறுக்கும்... நயவஞ்சக நரிகள் வரும்..
துணிவென்னும் ஆயுதமேந்தி தூர விரட்டு...

நீரிலும் வாழும்... நிலத்திலும் வாழும்...
நீலிக்கண்ணீர் முதலைகள் வரும்... 
தன்மானம் கொண்டு முதலைகளை   விரட்டு..

வழியிலே பள்ளங்கள் வரும்...
வழுக்கைப் பாதையும்  வரும்...
வழுக்கி விடாதே... வழுக்கையில் சறுக்கி விடாதே...

கறுப்புச்சட்டையே..  கலங்காமல் செல்... 
காலமெல்லாம் கழுகாய்ப்  பறந்து திரிந்து...
உன் வழி சொல்வோம்.. உடன் வழி செல்வோம்...

5 comments:

  1. அருமை தோழரே மகிழ்ச்சி

    ReplyDelete
  2. போர்க்குணம்-வர்க்கஅடித்தளம்-அர்ப்பணிப்பு உணர்வு-அநீதிகண்டு வெகுண்டெழும் துணிவு-மதிநூட்பம்மிகுந்த கவித்துவநடைஆகியன தோழர் மாரியின் தனிச்சிறப்பு

    ReplyDelete
  3. போர்க்குணம்-வர்க்கஅடித்தளம்-அர்ப்பணிப்பு உணர்வு-அநீதிகண்டு வெகுண்டெழும் துணிவு-மதிநூட்பம்மிகுந்த கவித்துவநடைஆகியன தோழர் மாரியின் தனிச்சிறப்பு

    ReplyDelete
  4. அன்பு தோழரே
    காரை என்றும் கரை படியாத சங்கம்
    என்றும் கரை பிடிக்க விடாத சங்கம்

    வெற்றி பெற்ற மாவட்டங்களுக்கு ஒரு விகிதாசார அடிப்படையில் கொடுப்பது தவறல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கபடும் நபரின் ஆற்றலின் அளவு மற்றவர்களை காட்டிலும் அதிகமாக உள்ளதா அல்லது ஏதேனும் இதில் சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதை தேர்ந்தெடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இது பொதுவுடைமை சங்க இதில் மற்ற கட்சிகளை போல தேர்ந்தெடுக்கும் முறை தவறு என்பதை மட்டுமே காரை சார்பாக சுட்டி காட்ட விழைகின்றோம். தேர்ந்தெடுக்கபடும் அல்லது தேர்ந்தெடுக்கபடுவதாக கூறப்படும் தலைவர்கள் , அவர்கள் மாவட்டத்தில் ஆற்றிய பணியை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் . கூட்டுறவு என்ற வார்த்தையின் அர்த்தம் புரிகின்றது,, ஆனால் அதை வெளிகொணர்ந்த மூத்த தலையை பேசவே மாட்டேன் என்கின்றீர்கள்,7ஆனது முதலில் பின்னர் 10 இலட்சம் ஆன செய்தி யாரல் பரப்பபட்டது என்ற செய்தி உங்களுக்கு தெரியாமல் இருந்தால் அது நிச்சயம் வருத்த்மான செய்தி தான். காரை இன்று மட்டுமல்ல என்றும் கரை பிடிக்க விடாது விடமாட்டோம் எந்த நிலையிலும் நன்றி
    மன்னிக்கவும் இது ஒரு வலைத்தளத்தில் போட்டிருந்த செய்திக்கு எதிர் பதவு அல்ல. சில வலைத்தளங்களில் காரை சேர்ந்த தோழர்கள் செய்யும் பதிவு நீக்கபடுகின்றது அல்லது அதற்கு வெளி விடுவதற்கு சில தோழர்க்ளுக்கு மனமில்லை ஆனால் நமக்கு மனமும் உண்டு மார்க்கமும் உண்டு நன்றி

    ReplyDelete
  5. அருமை இவன் பரமசிவம் மதுரை

    ReplyDelete