Saturday 9 July 2016

முனையிலே...முகத்து நிற்போம்...
காரைக்குடி மாவட்ட மாநாடு நிகழ்வுகள்... 
அய்யன் வள்ளுவன் சிலைக்கு
அண்ணாச்சி மாலை அணிவிக்கும் காட்சி

வந்தே மாதரம் முழக்கமிட்டு தேசியக்கொடிக்கும்  
இன்குலாப் முழக்கமிட்டு செங்கொடிக்கும் வணக்கம் சொன்ன  காட்சி..

அன்புத்தோழன் கார்த்தி அரங்கிலே தலைவர்கள் அமர்ந்துள்ள காட்சி 
கார்த்தியின் நினைவினைப் பகிரும் தோழர்.பட்டாபி...
அருமைத்தோழர் சேது அவர்களின் தலைமையில்
தோழர்கள்.. அசோகராஜன்..பட்டாபி...ஸ்ரீதர்...இராம்சேகர்...
கார்த்தியின் தாயார் பஞ்சவர்ணம் அவர்களிடம்
நிதி அளிக்கும் காட்சி...
மனிதனின் மானம் காக்கும்...
 ஆடை நெய்யும் பரமக்குடியிலே...
தொழிலாளியின் உரிமை காக்கும் 
NFTE  பேரியக்கத்தின்..
காரைக்குடி மாவட்ட மாநாடு...
வான்புகழ் வள்ளுவனுக்கு வணக்கம் செய்து  
கண்கவர்ந்து... காண்போர் கருத்தைக் கவர்ந்து...
பொன்னீலன்..PLR...சேது...பட்டாபி...அசோகராஜன் என.. 
   கலை... அரசியல்... சங்கத்தலைவர்கள் உரை கேட்டு...
துணைப்பொதுமேலாளரின் வாழ்த்து பெற்று...
கார்த்தியின்   குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டி...

விருதுநகர்...மதுரை..திருச்சி..கடலூர் 
மாவட்டச்செயலர்களின் வாழ்த்தொலி பெற்று...
அமைப்புநிலை விவாதித்து..
தேங்கியுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி..
தீர்மானங்களை இயற்றி...
பணி நிறைவு பெற்றவர்களைப்  பாராட்டி...
செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளித்து..
இனிய விருந்தோடு... இசை விருந்தும் தந்து...
கடமை.. கண்ணியம்.. மேலாக கட்டுப்பாடு.. காத்து..
புதிய நிர்வாகிகளை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து...
இனிதே... இனிதே..நடந்தேறியது...

மாவட்டத்தலைவர் 
தோழர்.பா.லால் பகதூர் TM 

மாவட்டச்செயலர் 
தோழர்.வெ.மாரி AO 

மாவட்டப்பொருளர் 
தோழர். நி.பாலமுருகன் TTA 

ஆகிய தோழர்களைக் கொண்ட 
புதிய மாவட்டக்குழு 
தன் கடன் பணி செய்வதென...
 உரிமைக்குரலை உரத்து ஒலிப்பதென... 
முனையில் முகத்து நிற்பதென..
இணைந்து நிற்கிறது... 
முனைந்து நிற்கிறது...

 மாநாடுகள்... குடமுழுக்குகள்..
புதிய சக்தி... புதிய பொலிவு...புதிய தெளிவு.. 
ஆனாலும் அதே தேவதைகள்...

பல நாள் தம் நித்திரை துறந்து...
சித்திரைத் திருவிழா போல்..
சங்கத்திருவிழா கண்ட...
பரமக்குடி தோழர்களுக்கு...
பாராட்டுக்கள்... பலப்பல..

வாழ்க... NFTE.. வளர்க... NFTE...

No comments:

Post a Comment