Monday 20 June 2016

நேர்மை வளர்த்திட... நல்வாழ்த்துக்கள்...

விருதுநகர் மாவட்ட மாநாடு 18/06/2016 அன்று 
விருதுநகரில் தோழர்.தளவாய்பாண்டியன் அவர்கள்
 தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

தோழர்கள்.ஆர்.கே., சேது, பட்டாபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.இராமசாமி. துணைப்பொதுமேலாளர் திரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். BSNLEU தவிர அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

சென்ற இராஜபாளையம் மாநாட்டில் மாநாடு துவங்குவதற்கு 
முன்பே  பதவிகளுக்குப் போட்டி என்ற நிலை உண்டாகியது.
இம்முறை ஒருமித்த கருத்துடனே மாநாடு துவங்கி
 ஒன்றுபட்ட பட்டியலைத் தேர்வு செய்தது.

மாவட்டத்தலைவர் தோழர்.இராகவன் அவர்களுக்கும் 
மாவட்டச்செயலர். தோழர்.இராம்சேகர் அவர்களுக்கும் 
மாவட்டப்பொருளர் தோழர். செல்வராஜ் அவர்களுக்கும் 
மற்றும் ஏனைய மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் 
நமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...

ஊழலும்... ஒழுக்கமின்மையும்... 
ஒருசேர நடமாடும் விருதுநகரில்.. 
நேர்மை போற்றிட.. கண்ணியம் காத்திட...
NFTEன் மரபு வளர்த்திட... 
தோழர்களை வாழ்த்துகிறோம்...

No comments:

Post a Comment