Friday 17 June 2016

வறியார்க்கு ஈவதே ஈகை...


வறியார்க்கொன்று ஈவதே ஈகை  மற்றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து...
என்ற குறளில் வறியவருக்கு  உதவுதே ஈகை என்கிறார்  வள்ளுவர்...

இது புனித ரமலான் மாதம்....
ஜக்காத் என்னும் தானங்களை 
வறியவருக்கும், தரித்திரருக்கும் வழங்குவது என்பது 
ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும் என்கிறது புனித திருக்குர் ஆன்...

தோழர்.கார்த்தியின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டுவது 
காரைக்குடி தோழர்களின் கடமை என்று நாம் சுட்டியிருந்தோம்...

17/06/2016  அன்று காரைக்குடி சங்க அலுவலகத்தில் 
நடைபெற்ற கிளைக்கூட்டத்தில் 

மாவட்ட உதவிச்செயலர் தோழர். B.லால் பகதூர்  ரூ.5000/=
GM அலுவலக முன்னணித்தோழர். S.இராஜேந்திரன் - Supdt - ரூ.3000/=
மாவட்டப் பொருளாளர் தோழர்.A .ஜெயராமன் - TM  ரூ.2000/=

என மனமுவந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அவர்களது ஈகை குணம் வளரட்டும்....
மற்ற தோழர்களும்... 
ஈகை என்னும் இணையற்ற செயல் புரிந்திட  
அன்புடன் வேண்டுகிறோம்...

1 comment:

  1. ஆனால் பல தோழர்கள் அதுவும் கார்த்தியை கசக்கி பிழிந்த நம் தோழர்கள் , இப்பொழுது நிதி என்றாலே ஓடுகின்றனர் தோழரே வலிக்கின்றது மனம்

    ReplyDelete