Monday 30 May 2016

ஞானப்பெருக்கே... வாழ்க...
நேர்மை மிடுக்கே... வாழ்க... வாழ்க...
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி - பணி நிறைவு நாள்  31/05/2016
அறிவில் ஆதவன்...
உருவில் வாமனன்..

கலையாத  இளமை...

வளையாத தலைமை...

பணிவுமிகு  இமயம்...

பாசமிகு இதயம்...

எளியோரிடம் அன்பு...
வலியோரிடம் அம்பு...

ஊராருக்கு  ஆரூரான்..

உற்றாருக்கு ஆருயிரான்...

ஞானையாவின் ஞானப்பிள்ளை...
குப்தாவின்  செல்லப்பிள்ளை...

ஜெகன் இல்லம் தந்தவன்..
ஜெகன் உள்ளம்  நிறைந்தவன்...

நெருக்கடிகள் தராதவன்...

நெருக்கடியில் தளராதவன்...

தோழர்களுக்கு குழந்தைச்சாமி...

தலைவர்களுக்கு  தகப்பன்சாமி...

வாசிப்பில் வசித்திடும் ஞானி..

நேசிப்பில்  வாழ்ந்திடும் தேனீ..

பேச்சும் எழுத்தும் மூச்சு...
கேட்போர் நெஞ்சில் வீச்சு..

சிவப்புச் சிந்தனை சிறக்கட்டும்...
சிறகுகள் மேலும் விரியட்டும்...

பாட்டாளிக்கு வழிந்த  உன் வியர்வை.. 
இனி... பாமரனுக்காகப்  பெருகட்டும்...


வசித்திடு... பல்லாண்டு...
வாசித்திடு... நூறாண்டு...

இன்று 31/5/2016 பணி நிறைவு பெறும் 
மாநிலச்செயலர் 
தோழர். பட்டாபிராமன் 
அவர்களை 
காரைக்குடி மாவட்டத் தோழர்கள்  சார்பாக 
வாழ்த்தி... வணங்கி... மகிழ்கின்றோம்...

No comments:

Post a Comment