Tuesday 26 April 2016

காலமெல்லாம்... காத்திருப்பு 


இவர்கள்...
கையேந்தும் பிச்சைக்காரர்களும் அல்ல...
காத்திருக்கும் பிச்சைக்காரர்களும் அல்ல...

காரைக்குடி மாவட்டத்தில்...
காலமெல்லாம் காவல் பணி செய்து விட்டு...
சம்பளம் வராதா? என 
கவலையோடு காத்திருக்கும் 
காவல்கார ஒப்பந்த ஊழியர்கள்...

பிப்ரவரி - மார்ச் 
இரண்டு மாத சம்பளம் இன்னும் 
பட்டுவாடா செய்யப்படவில்லை...
இதோ..
ஏப்ரலும் முடிந்து விட்டால்..
மூன்று மாதச்சம்பளம் முழுசாய்ப் பாக்கி...

ஏனிந்த இழிநிலை?
இதைச் சொன்னால் குற்றம்...
ஆனாலும் அழுத்தமாய் சொல்வோம்...
நிர்வாகமே...
உழைப்பவன் வியர்வை காயுமுன்னே கூலி கொடு...

No comments:

Post a Comment