Friday 18 March 2016

RULE- 8  மாற்றல்கள் 

TTA, TM மற்றும் SR.TOA  தோழர்கள் பலர் 
அடுத்த மாவட்டத்திற்கும், சிலர் அடுத்த மாநிலத்திற்கும் 
விதி 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பித்திருந்தனர். 
ஆனால் அவர்களது விண்ணப்பங்கள் அனுப்பப்படாமல் 
அந்தந்த மாவட்டங்களிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

இப்பிரச்சினை JCM தேசியக்குழுவில் எழுப்பப்பட்டு 
விண்ணப்பங்கள் உடனடியாக அனுப்பப்பட 
வேண்டுமென  கோரிக்கை எழுப்பப்பட்டது. 

தற்போது டெல்லி BSNL நிர்வாகம் இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் மாநில நிர்வாகங்களுக்கு  09/03/2016 அன்று கடிதம் அனுப்பியுள்ளது.  அதன்படி...

  • மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை மாநில மட்டத்திற்கு உரிய குறிப்புகளுடன் அனுப்ப வேண்டும்.
  • மாநில நிர்வாகங்கள் காத்திருப்போர் பட்டியலைத் தயாரித்து அதனடிப்படையில் மாற்றல்களை அமுல்படுத்த வேண்டும்.

  • தங்கள் குடும்ப சூழல் காரணமாக மாற்றலுக்கு விண்ணப்பித்த பெண் ஊழியர்களின் மாற்றல்கள் பரிவு அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்.

காரைக்குடி மாவட்டத்தில் நீண்ட நெடு நாட்களாக 
விதி 8 மாற்றல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 
குறிப்பாக குடும்ப சூழல் காரணமாக மாற்றல் கேட்டிருந்த 
மகளிர் தோழியர்களின் விண்ணப்பங்கள் கூட பரிசீலிக்கப்படவில்லை. 
தற்போது வெளி வந்துள்ள உத்திரவின் அடிப்படையில் தேங்கிக்கிடக்கும் விண்ணப்பங்கள் மேல்மட்டங்களுக்கு அனுப்பப்படும் என நம்புகிறோம்.

இப்பிரச்சினையை JCM தேசியக்குழுவில் 
எழுப்பிய நமது சங்கத்திற்கு நன்றி.

No comments:

Post a Comment